June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தவெக சார்பில் அஞ்சலை அம்மாள் படத்திறப்பு மற்றும் அன்னதானம்

வந்தவாசி மே 02:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தேரடி பகுதியில் தவெக சார்பில் மக்கள் சேவகர் தியாகி அஞ்சலை அம்மாள் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் கார்த்திக், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் திருவாசகமணி, நகர செயலாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் ஜல்லி குமார், இளையராஜா, மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.