சேலம்,மேட்டூரில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மின்கம்பங்கள்,மரங்கள் முறிந்துவிழுந்து 3 வீடுகள் சேதமடைந்தன.
மேலும், 2 சிறுமிகள் காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த மே 4-ம் தேதி அக்னி நட்சத்திம் தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தில் கடும் கோடை வெப்பம் தாக்கி வந்தது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் கோடையின் வெப்பம் சற்று குறைந்து காணப்பட்டது. தற்போது, அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டமாக இருந்த நிலையில், இரவு திடீரென பலத்த காற்று வீசியது.
குறிப்பாக, மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக, ஆங்காகங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன, மின்கம்பங்களும் சேதமடந்தன. இதனால் இரவில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. மேலும், மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
மேட்டூரில் பெய்த கனமழையால் செக்கானூர் அடுத்த ஜெ.ஜெ. நகரில் மின்கம்பங்கள் சாய்ந்து வீடுகள் மீது விழுந்து சேதம் அடைந்தது. இதனையறிந்த மினவாரிய ஊழியர்கள் உடனடியாக மின்விநியோகத்தை துண்டித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

இதேபோல அப்பகுதியில் இருந்த ராட்சத மரம் ஒன்று முறிந்து வீடுகள் மீது விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரகுபதி என்பவரின் குழந்தைகளான கிருஷ்க்கா(4), கிருஷ்தா (4) ஆகிய 2 சிறுமிகள் காயம் அடைந்தனர். இதையடுத்து இருவரையும் மீட்கப்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை வருகின்றனர்.
மேலும் இந்த விபத்தில் வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, பிரிட்ஜ், டிவி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சேதம் அடைந்தன. இதனையடுத்து இன்று காலை அப்பகுதிக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் உடைந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வீடுகள் மீது விழுந்த ராட்சத மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, வருவாய் துறை அதிகாரிகள் சேதமடைந்த வீடுகள், பொருட்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, முதற்கட்டமாக 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சேதம் அடைந்த வீடுகளுக்கும் வீட்டிலிருந்த பொருட்களுக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்: எடப்பாடி 51, சங்ககிரி 46.2, மேட்டூர் 41, டேணிஷ்பேட்டை 23, கரியகோவில் அணை 20, ஓமலூர் 2, சேலம் மாநகரம் 1.3, ஆத்தூர் 1 என மொத்தமாக 185.50 மில்லி மீட்டர் மழை பதிவானது.

More Stories
தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்ட அதிமுக மாநில கழக செயலாளர், கழக சட்டமன்ற உறுப்பினர்திரு. ஏ. அன்பழகன் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.இந்நிகழ்வின் போது மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள்ஏ கே டி ஆறுமுகம், திருமுருகன், மாண்புமிகு முதலமைச்சரின் நேர்முக உதவியாளர் சுந்தர் ஆகியோர்உட னிருந்தனர்.
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை: குடோனுக்கு சீல், ஒரு நபர் கைது – போலீசாரின் அதிரடி நடவடிக்கை!புதுச்சேரி:புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (சட்டம் & ஒழுங்கு) கலைவாணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரிலும், வடக்கு காவல் கண்காணிப்பாளர் வம்சீதர ரெட்டி, இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையிலும், புதுச்சேரி காவல் துறையினர் சட்டவிரோத செயல்களை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று (ஏப்ரல் 24, 2026) மாலை 4 மணியளவில், டி.நகர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜன் மற்றும் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருப்பூர் குமரன் வீதி, எண். 22 என்ற முகவரியில் உள்ள ஒரு குடோனை, போலீசார் வருவதைக் கண்ட நபர் ஒருவர் அவசரமாக பூட்ட முயன்றார். சந்தேகமடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர் கோசாபாளையத்தைச் சேர்ந்த மாரியமுத்து (50) என்பது தெரியவந்தது. தான் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை குறிவைத்து, அதிக லாபத்திற்காக அரசு தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதை அவர் ஒப்புக்கொண்டார்.இதனையடுத்து அவரது குடோனில் போலீசார் நடத்திய சோதனையில், கீழ்க்கண்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன:கூல் லிப் (Cool Lip) – 2 பண்டல்கள்ஹான்ஸ் (Hans) – 8 பண்டல்கள்விமல் பான் மசாலா (Vimal Pan Masala) – 6 பண்டல்கள்வி1 டொபாக்கோ ஹேப்பி ஹோலி (V1 Tobacco Happy Holi) – 7 பண்டல்கள்இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 1,50,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக டி.நகர் காவல் நிலையத்தில் வழக்கு (Cr. No. 96/2026) பதிவு செய்யப்பட்டு, மாரியமுத்து கைது செய்யப்பட்டார். COTPA சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் (JJ Act) கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.குற்றவாளியை விரைந்து கைது செய்து, தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மற்றும் வடக்கு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பாராட்டினர்.
மணப்பாறை தொகுதியில்