June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செஞ்சி செக்கோவர் நிறுவனம் சார்பில் குழந்தைகள் உரிமைகள் பொங்கல் கொண்டாட்டம்.

செஞ்சி ஜன 11

செஞ்சி செக் கோவர் நிறுவனத்தின் சார்பாக மாபெரும் குழந்தைகள் உரிமைகள் பொங்கல் கொண்டாடப்பட்டது செஞ்சி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து பேரணியாக திருவண்ணாமலை சாலை வழியாக வள்ளி அண்ணாமலை மண்டபத்தின் வழியாக பீரங்கிமேடு எம்ஜிஆர் நகர் மந்தவெளி வரை குழந்தைகள் உரிமைகள் கோஷங்கள் முழங்கியும் குழந்தைகள் பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி பேரணி நடைபெற்ற இப்பேரணியை துணை வட்டாட்சியர் அக்தர் ஜெகன் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் துரைராஜ் வருவாய் ஆய்வாளர் கண்ணன்செஞ்சி செகோர் இயக்குனர் அம்பிகா சூசைராஜ் காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் ஆகியோர் துவக்கி வைத்தனர்
மந்தவெளியில் சிறப்பான பொங்கல் திருவிழா தொடங்கப்பட்டது தீயணைப்பு துறை ராதாகிருஷ்ணன் நிலை அலுவலர் இளங்கோவன் காவல் நிலைய மகிமை ராஜா குமார் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் பாலாஜி ரோமியோ ஆகியோர் குத்துவிளக்கேற்றி பொங்கல் குழந்தைகள் உரிமைகள் பொங்கலை துவக்கி வைத்தனர் செக்கோவர் நிறுவனத்தின் எஸ் டி சி ஆர் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற இந்தக் குழந்தைகள் உரிமைகள் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் குழந்தைகளுக்கு உரியடி நடத்தப்பட்டது தடாகம் நல்லன்பிள்ளை பெற்றால் மேல் பாப்பாபாடி ஆலம்பூண்டி செவலப்ரை கவரை, காரை ஆணையறிb தையூர் ஆகிய கிராமங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் மற்றும் கிராம குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆகியோர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பேர் கலந்து கொண்டனர்