புதுச்சேரியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சிறப்பு நிகழ்ச்சி ஹோட்டல் ஜெயராமில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மகளிர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சட்டமன்ற சபாநாயகர் திரு.ஏம்பலம் ஆர். செல்வம், மாநில தலைவர் திரு வி.பி. ராமலிங்கம், மகளிர் அணி தலைவி திருமதி தாமரைச்செல்வி, மகளிர் அணி மாநில பொறுப்பாளர் திருமதி ஜெயந்தி, மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர்கள் திருமதி விஜயலட்சுமி மற்றும் திருமதி பிரியா ஆகியோர் கலந்து கொண்டு மகளிர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேலும் சிறப்பு அழைப்பாளராக ஆந்திரா மாநிலம் பாஜக செய்தி தொடர்பாளர் திருமதி. சைத்தாநீ யாமினி ஷர்மா, நகர் மாவட்ட தலைவர் திரு கிருஷ்ணராஜ், மகளிர் அணி மாநில துணை தலைவிகள் மஞ்சு, மீனா, ஷகீலா, நகர் மாவட்ட தலைவி திருமதி. அனுராதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல் விளையாட்டு துறையில் சாதனை படைத்த தனுஜா (நேஷனல் கராத்தே), காயத்ரி ராமன் (இன்டர்நேஷனல் வாலிபால்), மௌனிகா (நேஷனல் கராத்தே) மற்றும் கீர்த்தனா (நேஷனல் கராத்தே) ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் பெண்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக மத்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெண்களின் அதிகாரமளிப்பு, பாதுகாப்பு மற்றும் தொழில் முன்னேற்றத்திற்காக செயல்படுத்திய திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் எதிர்கால இந்தியாவின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு மற்றும் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதும் வலியுறுத்தப்பட்டது.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!