ஓசூர் ராம்நகரில் திறந்த வெளி பகுதியில் நான்கு இடத்தில் பழைய பொருட்கள் சேமிப்பு குடோன்கள் உள்ளது இதில் உசேன் (30) என்பவருக்கு சொந்தமான பழைய பொருட்கள் சேமிப்பு குடோனில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை சூழ்ந்து வான் உயரத்திற்கு புகை சென்றது பற்றி எரிந்த தீயால் அப்பகுதி முழுவதும் கடுமையான வெப்பம் காணப்பட்டது
தகவல் அறிந்து சென்ற ஓசூர் தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இரண்டு தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர் தீ விபத்தில் குடோனில் சேமித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான மதிப்புள்ள பழைய பொருள்கள் எரிந்து சேதமானது தீ விபத்தை பார்ப்பதற்காக சாலையில் சென்ற பொது மக்களும் அங்கு குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!