ஜாபர் சாதிக் அவர்கள் வெறும் அரசியல் கட்சிப் பணியோடு நின்றுவிடாமல், திருப்பூரில் மிகச்சிறந்த சமூகச் சேவகராக வலம் வருபவர். மதம், இனம் கடந்து அனைத்துத் தரப்பு மக்களிடமும் மிகுந்த அன்புடன் பழகக்கூடியவர். பொதுமக்களுக்கு எந்தவொரு இடர் ஏற்பட்டாலும் உடனடியாக அங்கு சென்று களப்பணியாற்றும் நற்பண்பு கொண்டவரை, இந்த வழக்கில் தவறாகச் சேர்த்திருப்பது அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயலாகும். ஆகவே, தமிழக அரசு உடனடியாக அவரை விடுதலை செய்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மக்கள் பணியாற்றி வரும் ஒருவரை ஆதாரமின்றி கைது செய்திருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வழக்கினை எஸ்டிபிஐ கட்சி சட்டரீதியாக எதிர்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பஷீர் அஹமது
மாவட்டத் தலைவர்,
எஸ்டிபிஐ கட்சி, திருப்பூர் வடக்கு மாவட்டம்.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.