ஈரோட்டில் குடியரசு தினத்தன்று ஒரு புதிய முயற்சி..
ஈரோடு. ஜன. 28
இந்தியா 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றாலும், இந்திய மக்களுக்கென ஒரு அரசியலமைப்புச் சட்டம் தேவைப்பட்டது. இதற்காக நவம்பர் 1946-இல் அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது. இதன் முதல் கூட்டம் 9 டிசம்பர் 1946-இல் நடைபெற்றது. 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் விவாதித்து இந்திய அரசியலமைப்பை உருவாக்கியது. இதன் நிரந்தரத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் வரைவுக் குழுத் தலைவராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் செயல்பட்டனர்.
26 நவம்பர் 1949 அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்த நாள்: 26 ஜனவரி 1950. இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் நாம் குடியரசு நாளாகக் கொண்டாடுகிறோம்.
இதை வலியுறுத்தி பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக இந்தியா தனது 76-வது குடியரசைத் தழுவும் வேளையில், உடல் வலிமையை வலியுறுத்தியும் மற்றும் குடியரசு நாளைப் போற்றியும் இன்று ஈரோட்டில் i-Fit Club உறுப்பினர்கள் (100 உறுப்பினர்கள்) இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஆரம்பித்து 26 கி.மீ தூரம் நமது மூவர்ண தேசியக் கொடியை ஏந்தித் தொடர் ஓட்டம் ஓடினர்.
இந்தத் தொடர் ஓட்டத்தை i-Fit Club நிர்வாகிகள் முன்னின்று ஏற்பாடு செய்தனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!