100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கு பொங்கல் புடவைகள் வழங்கப்பட்டது.
ஈரோடு. ஜன. 13


காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளை சமூக அமைப்பு சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு பொங்கல், கரும்பு மற்றும் சேலைகள் வழங்கப்பட்டது.
முன்னதாக சமத்துவ பொங்கல் வைத்து ஈரோடு காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளை நிறுவன தலைவர் சாந்தாதேவி புதுப் பானையில் பொங்கல் வைத்து, சூரிய பகவானை வழிபட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார்.
பின்னர் நடந்த நிகழ்ச்சியில் 100 நாள் வேலைத்திட்ட பெண் தொழிலாளர்களுக்கு, சர்க்கரைப் பொங்கல், கரும்பு மற்றும் சேலைகள் வழங்கி அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மக்கள் நல அறக்கட்டளையின் நிர்வாகிகள், திண்டல் சாந்தி, பிரியா, சத்தியமூர்த்தி, சண்முகநாதன், சௌந்தர்ராஜன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்