வந்தவாசி, டிச 07:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 69 ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அம்பேத்கரின் அரும்பணிகள்…! என்ற தலைப்பில் பட்டதாரி ஆசிரியர் ம. ரகுபாரதி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், ஆசிரியர் மஹாவீர், ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர் பெ. பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர். அம்பேத்கரின் அரும்பணிகள் என்ற தலைப்பில் நடைபெற்ற பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 10, +2 தனித்தேர்வு மாணவ மாணவிகள் பலரும் பங்கேற்றனர்.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.