வந்தவாசி, டிச 07:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 69 ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அம்பேத்கரின் அரும்பணிகள்…! என்ற தலைப்பில் பட்டதாரி ஆசிரியர் ம. ரகுபாரதி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், ஆசிரியர் மஹாவீர், ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர் பெ. பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர். அம்பேத்கரின் அரும்பணிகள் என்ற தலைப்பில் நடைபெற்ற பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 10, +2 தனித்தேர்வு மாணவ மாணவிகள் பலரும் பங்கேற்றனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்