வந்தவாசி, மார்ச் 09:
வந்தவாசியில் பழமை வாய்ந்த கோட்டை ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருள்மிகு சீதா சமேத ஶ்ரீ கோதண்டராமர் மற்றும் கோட்டை ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த மூன்று கால பூஜைகளாக சங்கல்பம், ஆசார்யவரணம், அங்குரார்பணம், மஹ சாந்தி ஹோமம், சாற்றுமுறை உள்ளிட்டவைகள் நடைபெற்றது. மேலும் நடைபெற்ற யாகசாலை பூஜையில் புனித நீர் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிறகு வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக மூல மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு மாலை சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

More Stories
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!