வந்தவாசி, ஜன 31:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் மகாத்மா காந்தியின் 79 ஆவது நினைவு தினத்தையொட்டி ‘என்றும் மகாத்மா’ பேச்சரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் பெ.பார்த்திபன், ஆசிரியர் மஹாவீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் சா.இரா.மணி பங்கேற்று என்றும் மகாத்மா என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். பிறகு காந்தியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இறுதியில் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் மத நல்லிணக்க உறுதிமொழியை ஏற்றனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்