கலைஞர் கருணாநிதியின் 103–வது பிறந்த நாள் விழா புதுச்சேரி திமுக சார்பில் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி திமுக சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழா திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா.சரவணன் தலைமையில் மணிக்கூண்டு அருகே கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக மாநில அமைப்பாளர் சிவா அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இலவச நீர் மோர் பந்தலை திறந்து வைத்த திமுக மாநில அமைப்பாளர் சிவா பொது மக்களுக்கு இலவசமாக நீர் மோர் இளநீர் தர்பூசணி ஆகியவைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்..
நிகழ்வில் தொகுதி திமுக செயலாளர் சவுரி ராஜன் அவை தலைவர் எழிலன், துணை செயலாளர் ரவி, முன்னால் கவுன்சிலர் தனசேகர் தொகுதி இளைஞரணி அமைப்பாளர் மதன்பாபு, துணை செயலாளர் கலைவாணி, மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார், சந்துரு,மாநில சுற்றுச்சூழல் அணி நவீன், உள்ளிட்ட முத்தியால்பேட்டை தொகுதி திமுகவை சேர்ந்த அனைத்து பிரிவு நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!