June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை ஹெல்மெட் போடவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுகிறது.

விபத்தை ஏற்படுத்தும் கார் மீது என்ன விதிக்கப்படும். மேலும் மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை காரில் ஏற்றிக் கொள்ள புதுச்சேரி அரசு ஊக்கப்படுத்துமா?

ஏழைகளுக்கு மட்டும் தான் தண்டனையா?

பணம் வைத்திருந்தால் எத்தனை விபத்து ஏற்படுத்தி எத்தனை பேர் வேண்டுமானாலும் கொள்ளலாம் அது குற்றம் அல்ல அது விபத்து அவர்களுக்கு தண்டனையும் இல்லை

அவர்கள் புண்ணியம் செய்தவர்கள்

அதுவே இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றால் மூன்று முறைக்கு மேல் அபராதம் மிதித்தால் வாகன உரிமம் ரத்து செய்யப்படும் இது ஒரு பெரிய குற்றம்

அரசியல்வாதிகள் ரோட் ஷோ நடத்தும் போதெல்லாம் அபராதம் இல்லை தேர்தல் முடிந்தவுடன் அரசு தன் வேலையை காட்டுகிறது.

கடந்த 2021 ஆண்டு தேர்தலில் கொரோனா வீரியம் அதிகரித்தது லாக் டவுன் போடப்பட்டது ஆனால் தேர்தல் வரும் போது அனைத்தையும் தளர்த்தப்பட்டது தேர்தல் முடிந்தவுடன் கொரோனா அதிகரித்தது பல உயிர்கள் பிரிந்தது அதைப்பற்றி ஒரு துளிகூட கவலை இல்லை.

*பாதிப்படையவர்கள் அனைவருமே ஏழைகள் மட்டும் தான் அவர்கள் பிச்சை எடுத்தாவது அபராத தொகையை கட்ட வேண்டும் கார் வைத்திருந்தால் எத்தனை பேர் வேண்டுமானாலும் காரில் ஏற்றி கொள்ளலாம். அவர்களுக்கு அரியாங்குப்பம் காவல் நிலையம் பாதுகாப்பாக இருக்கும் புதுச்சேரி காவல்துறையை கண்டித்து விரைவில் புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்கம் சார்பில் தேர்தல் நடைமுறை முடிந்தவுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.