June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செஞ்சியில் அதிக ஒளி எழுப்பும் ஏர் ஹாரன் பயன்படுத்தும் பேருந்துகளில் ரூ.10000 அபராதம் விதித்த செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் மற்றும் லாரிகளில் அதிக ஒளி எழுப்பும் ஹாரன்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் கிருஷ்ணன் அதிக ஒளி எழுப்பக்கூடிய பேருந்துகள் மற்றும் லாரிகளை மடக்கி சோதனை செய்து ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்தார்.இந்த ஆய்வின்போது போக்குவரத்து காவல்துறையினர் உட்பட பலர் இருந்தனர்.