வந்தவாசி, டிச 30:
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றியம், இளங்காடு ஊராட்சியில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் சார்பில் கோமாரி நோய் தடுப்பு பணி முகாமை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினர். மேலும் கால்நடை மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற பொது மக்களுக்கு கால்நடைகளை பராமரித்தல், நோய் கிருமிகளில் இருந்து பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வு தகவல்கள் வழங்கப்பட்டது. அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!