கள்ளக்குறிச்சி ஜூன் 12
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பத்மஜா, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகியோர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்தின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வில் பஸ் நிலைய பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும். தண்ணீர் தேங்கினால் அதனை உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும். கட்டண கழிப்பறைகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். பஸ் நிலையம் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் புகார் எண்களை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.
பஸ் நிலையத்தினை துாய்மையாக பராமரிக்க வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் பயணிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வில் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.