கண்ணகி கோயிலில் ஒவ்வொரு மாதமும் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்:: பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் தவராஜா:-தேனி. மே.03-வரலாற்றுச் சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோவிலில் தேனி மாவட்ட பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் தவராஜா கண்ணகி அம்மனை வழிபட்டார்.சித்ரா பௌர்ணமி திருநாளில் மங்கலதேவி கண்ணகி அம்மனை வழிபட்ட பின்பு அவர் தெரிவித்ததாவது: பனியன்குடி வழியாக தமிழக வனப்பகுதியில் சாலை அமைத்தால் தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்கள் எந்த இடையூறும் இன்றி கண்ணகி அம்மனை வழிபாடு செய்வார்கள்.சாலை அமைக்கும் பட்சத்தில் தமிழக பக்தர்கள் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கண்ணகி அம்மனை வழிபட்டு செல்வார்கள்.அதற்கு அரசு முழு முயற்சியுடன் ஏற்பாடு செய்ய வேண்டும்.சாலை அமைப்பது ஒன்றே தமிழக பக்தர்கள் எந்தவித இடையூறும் இன்றி கண்ணகி அம்மனை தரிசிப்பதற்கு தீர்வாக இருக்கும் என்று தெரிவித்தார்.தேனிமாவட்டம், கூடலூர் அருகே பளியன்குடி அருகே விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த கோவில் சேர மன்னன் செரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டது.சித்ரா பௌர்ணமி முழு நிலவு நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த திருவிழாவில் இரு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்.அதுபோல்,கூடலூர் அருகே பளியன்குடி மலைப்பகுதி வழியாக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்து செல்வது வழக்கம்.பளியன்குடியில் இருந்து கண்ணகி கோயில் வரை நடந்து செல்லும் பாதை 6.6 கி.மீட்டர் உள்ளது.தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதிகாலையில் பொங்கல் வைக்கப்பட்டு, பசுமையை குறிக்கும் வகையில் மங்கல தேவி கண்ணகிக்கு பச்சை பட்டு சாத்தப்பட்டு வண்ண மலர்கள் மற்றும் சிறப்பு அலங்கார பொருட்கள் கொண்டு சிறப்பான முறையில் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.மேலும்,கண்ணகி கோயில் வளாகத்தில் சித்ரா பௌர்ணமி அன்று மாலை 3:30 மணியளவில் பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கி காயமடைந்த கேரள மாநில காவலர் மற்றும் கேரள,தமிழக பக்தர்கள் பூரண குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும் தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் தவராஜா தெரிவித்தார்.

More Stories
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பிரதமரின் பன்னிரண்டு ஆண்டு கால நல்லாட்சியை முன்னிட்டு நாட்டுக்குப் பயன்படும் வகையில் ஒரு நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும் . என்ற நோக்கத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியாக சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டது விழா நடைபெற்று வருகிறது.மாநிலத் தலைவர் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின், ஆணைக்கிணங்க திருச்சிமாவட்ட புறநகர் தலைவர் அஞ்சாநெஞ்சன் அவர்களின், ஆலோசனின் படி மணப்பாறை நகர் மண்டலில் நகர தலைவர் சுரேஷ் தலைமையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டது விழாவில் மாவட்ட பொதுச்செயலாளர் பொன்னுவேல் மாவட்ட அமைப்பு சாரா பிரிவு செயலாளர் வீரப்பன் மண்டல் பொதுச் செயலாளர் ராஜா மண்டல் செயலாளர் ஆரோக்கியசாமி கிளை தலைவர் சதீஷ்குமார் மகளிர் அணியைச் சார்ந்த ராஜராஜேஸ்வரி வெண்ணிலா மற்றும் பல பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மகா மாரியம்மன் கூழ்வார்த்தல் திருவிழா..!
பிரதமர் மோடியின் ஆயுள் வேண்டி புதுச்சேரி பாஜகவினர் மனக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு!