விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் கொத்தமங்கலம் கிராமம் ஏரி அருகில் ஆதரவின்றி சுமார் 95 வயது மதிக்கத்தக்க வயதான மூதாட்டி ஒருவரும், அவருடன் மாற்றுத்திறனாளியான மகனும் இருப்பிடம் இல்லாமல் தார்பாய் அமைத்து வசித்து வந்தனர். மழை காலங்களில் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வந்தனர். இதனை அறிந்த உதவும் உள்ளங்கள் ட்ரஸ்ட் குழுவினர் நண்பர்களிடத்தில் உறுப்பினர்களிடத்தில் மற்றும் வானூர் மனமகிழ் மன்றம் குழுவினரிடத்தில் உதவி பெற்று மூதாட்டிக்கு ஷீட் வீடு மற்றும் அரிசி, மளிகை பொருட்கள், பாத்திரம், உடை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்கள். இந்த நிகழ்வில் மனமகிழ் மன்றம் நண்பர்கள், உதவும் உள்ளங்கள் ட்ரஸ்ட் நிறுவனர் ஜான் சத்தியசீலன், உறுப்பினர்கள் இல்லோடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி ஸ்டாலின், டாக்டர். விவேக், அறிவழகன், சத்தியராஜ், ஹீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
உதவும் உள்ளங்கள் டிரஸ்ட் சார்பில் மூதாட்டிக்கு வீடு வழங்கல் :

More Stories
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.