வந்தவாசி, ஜூன் 24;
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி தலைவர் மு.ரமணன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் வி.பிரியா ரமணன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சி.ருக்மணி வரவேற்றார்.
தமிழ் துறை தலைவரும், யோகா பயிற்சியாளருமான மா.ஞானமலர் பங்கேற்று, யோகாவும் மனிதநேய மாண்பும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி, யோகாசன முறைகளை மாணவிகளுக்கு விளக்கினார். மேலும் பல்வேறு யோகாசன முத்திரைகளை மாணவிகள் செய்து காட்டினர். இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். இறுதியில் தமிழ் துறை பேராசிரியை சாந்தி நன்றி கூறினார்.

More Stories
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் மனையிடப்பட்டா வழங்குவதில் வெளிப்படையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி கோரிக்கை!
புதுச்சேரி: திரைக்கலையில் தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு, மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது