விழுப்புரம் ஆகஸ்ட் 02
விழுப்புரம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரங்கத்தில் அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பூவழகன் தலைமை தாங்கினார்
மாவட்டச் செயலாளர் முகமது காஜா அனைவரையும் வரவேற்றார்
மாவட்ட பொருளாளர் வெங்கடேச பெருமாள் சங்க செயல்பாடுகளையும் தீர்மானங்களையும் வாசித்தார்
கூட்டத்தில் புதிய நிர்வாகியாக கோவிந்தசாமி தேர்வு செய்து மாவட்ட துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது
தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் பதவி ஏற்றமைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
விழுப்புரம் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் சந்தா வசூல் மற்றும் வட்டக்கிளை அளவில் பொதுக்குழு கூட்டம் நடத்துவது என பல்வேறு கோரிக்கைகளை வைத்து விரிவாக பேசப்பட்டது இக்கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் விருதகிரி மாவட்ட அமைப்பு செயலாளர் வேல்முருகன் மாவட்ட இணை செயலாளர் அப்துல் ரவூப் மத்திய செயற்குழு உறுப்பினர் முருகன் மாவட்ட இளைஞரணி செயாலாளர் முருகன் மாநில தொழில் அணி செயலாளர் விஜேந்திரன் ஊரக வளர்ச்சி துறை சார்ந்த டேவிட் குணசீலன் கோகுல்ராஜ் கூட்டுறவு துறைச் சார்ந்த விக்ரம் வட்ட கிளைத் தலைவர்கள் விழுப்புரம் கோவிந்தசாமி மேல்மலையனூர் வெங்கடேசன் செஞ்சி உமாபதி பள்ளிக்கல்வித்துறை சேர்ந்த கந்தவேல் பிரதாப் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் மாவட்ட தணிக்கையாளர் மனோகரன் நன்றி தெரிவித்தார்.

More Stories
செஞ்சி செக்கோவர் நிறுவனம் சார்பில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர்.
பள்ளிபாளையம் பகுதிகளில் தொடரும் சாயப்பட்டறைகளின் அத்து மீறல்கள்..
கதை வடிவில் கணினி பாடம்..