முதலியார்பேட்டை, ஜூன் 22:
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் N. ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஏற்பாடு செய்யப்பட்டது.

மாநில நிர்வாகிகள் புதியவன் மற்றும் நிரேஷ் முன்னிலையில், தொகுதி தலைவர் N. மணிபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 400 பொதுமக்களுக்கு சேலைகள் மற்றும் 300 மாணவர்களுக்கு எழுதுபொருள் தொகுப்புகள் வழங்கப்பட்டன.
முதலியார்பேட்டை தபால் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்த S. பாலமுருகன் (B.Com., CS) ஏற்பாடுகளை செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், பிறந்தநாளை சமூக நலத்திட்டங்களின் மூலம் கொண்டாடியது பாராட்டத்தக்கது என தெரிவித்தனர்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!