சேலம்,ஏற்காட்டில் விவசாயியை வெட்டிக்கொன்ற சகோதரர்கள் – அரங்கேறிய பயங்கரத்துக்கு காரணம் என்ன?
விவசாயியை வெட்டிக்கொலை செய்ததாக சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
முன்விரோதம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, தலைச்சோலை கிராமம், பாசிப்பள்ளம் பகுதியில் வசித்து வருபவர் முருகன் (வயது 37).இவர் விவசாய கூலித் தொழிலாளி ஆவார். இவரின் சகோதரர் செல்வகுமார் (வயது 40). இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட ஆண்டுகளாக நிலத்தகராறு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
சரமாரி வெட்டு:
இதனிடையே, கடந்த ஜூன் 15ம் தேதியன்று இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, செல்வகுமார், அவரின் மகன்கள் அமர்நாத் (வயது 26), தினேஷ் குமார் (வயது 23) ஆகியோர் முருகனை சரமாரியாக கத்தியால் வெட்டி இருக்கின்றனர்.
சகோதரர்கள் கைது:
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த முருகன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த தினேஷ்குமார், அமர்நாத் ஆகியோரை கைது செய்தனர். செல்வகுமாரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

More Stories
திருச்சி ரயில் நிலைய நடைமேடை எண் 5 ல் தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் வண்டி எண் 22657 பின்னால் உள்ள மகளிர் பொது பெட்டியில் பயணம் செய்து வந்த செல்வப் பிரியா என்பவரிடமிருந்து திருச்சி ரயில் நிலையத்தில் ஒப்பந்ததாரராக தனியார் நிறுவனமான THARU & SONS ல் ரயில் வண்டிக்கு Water Filling வேலை பார்க்கும் பீகாரை சேர்ந்த நிரஞ்சன் மண்டல் வயது 38, S/o கணேஷ் மண்டல், பவானி பூர், பூர்ணியா மாவட்டம், பீகார் என்பவர் அப்போது நின்று கொண்டிருந்த மேற்கண்ட வண்டியில் ஏறி செல்போனை எடுத்துக் கொண்டு ஓடும்போது அப்போது பணியில் இருந்த ரயில்வே காவல் நிலைய காவலர் திரு சதீஷ்குமார் கையும் களவுமாக பிடித்து திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய ரயில் நிலையத்தில் ஒப்படைத்தவரை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் உயர் அதிகாரிகளின் உத்தரவு படி வழக்கு பதிவு செய்து திருச்சி நீதிமன்றம் JM 4ல் ஆஜர் செய்து 15 நாட்கள் காவல் அடைப்பு பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மத்தூர் அருகே சோகம்: திருமணத்திற்கு வந்த மூதாட்டி கிணற்றில் சடலமாக மீட்பு! போலீசார் விசாரணை
சேலம்,23/06/2026.