August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இந்திய நாட்டின் 80வது சுதந்திர தின விழா காந்தி சிலை கடற்கரையில் நடைபெற்றது!

15, 16, 17 இந்த மூன்று நாட்கள் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கலை பண்பாட்டு துறையுடன் இணைந்து ஸ்ரீ அங்காளம்மன் கலை குழு புதுச்சேரி நடிகர்கள் மற்றும் பன்முக கலைஞர் முன்னேற்ற சங்கம் கலந்து கொண்டு பல்வேறு கலை நிகழ்ச்சியை நடத்தினர்.

கடற்கரை சாலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறப்பாக நடனமாடிய தாரை தப்பட்டை கலைஞர்களுக்கு இரண்டாம் பரிசு பெற்றனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள்.

இந்த சுதந்திர தின விழாவில் ஆச்சரியமூட்டும் வகையில் பன்முக கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் நிகழ்ச்சியை கலைமாமணி குமரன் மற்றும் கலைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.