July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாவட்டச் செய்திகள்

சேலத்தில் உச்​ச நீதி​மன்​ற நீதிப​தி எம்​.எம்​.சுந்​தரேஷ் – நாடு முழு​வதும்​ 3.50 கோடி குற்​ற​வியல்​ வழக்​கு​கள்​ தேக்​கம்​ அடைந்​துள்​ளதாக...
புதுச்சேரி, ஏப்ரல் 26: பிரான்ஸ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ‘பெத்தான்ஸ்’ (Pétanque) விளையாட்டுக்கு, இந்திய அரசு மற்றும் புதுச்சேரி...

புதுச்சேரியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை முடக்கும் எதிர்க்கட்சிகளை கண்டித்து புதுச்சேரி பாஜக மகளிர் அணி சார்பில் மாபெரும்...
செஞ்சி ஏப் 27 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி செக்கோவர் தொண்டு நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்...
வந்தவாசி, ஏப் 27: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் டாக்டர் அம்பேத்கரின் 135 ஆவது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்...
சேலத்தில் தோ்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் கலைப்பு. தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க அமைக்கப்பட்டிருந்த...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், ஜவளகிரி வனச்சரகத்துக்கு உட்பட்ட தேவரபெட்டா காப்புக்காட்டில் இருந்து வெளியேறிய காட்டு யானை, கும்மளாபுரம்...
வந்தவாசி, ஏப் 26: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில்...
ஈரோடு தயா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் என். எம் பிரதீப் வழங்கினார். ஈரோடு. ஏப்ரல். 26 ஈரோடு...

*ஓட்டு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு*கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், ஓட்டு எண்ணும் மையத்திற்கு, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய, 6 சட்டசபை தொகுதிகளுக்கு, நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு எண்ணும் மையத்தில், 6 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகள் முன் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து எஸ்.பி., தங்கதுரை கூறியதாவது: ஓட்டு எண்ணும் மையத்திற்கு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைகளின் முன்புறம், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல், மத்திய துணை ராணுவப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் என, 297க்கும் மேற்பட்டவர்கள் கல்லுாரி வளாகத்தில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அதன்படி, ஒரு ஏ.டி.எஸ்.பி., தலைமையில், ஒரு டி.எஸ்.பி., 3 இன்ஸ்பெக்டர்கள், 68 போலீசார், 20 ஆயுதப்படை போலீசார், 6 மத்திய துணை ராணுவப்படையினர் ஒரு ஷிப்ட்-க்கு, 99 பேர் என மொத்தம், 297 பேர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். மேலும், கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் கல்லுாரியை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.