September 12, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

வந்தவாசி, ஜூன் 26:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தீயணைப்புத் துறை மற்றும் ஆசியன் இன்ஸ்டிடியூட் இணைந்து ‘தீயணைப்பும் மருத்துவ துறையும்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கை ஆசியன் வளாகத்தில் நடத்தினர். நிகழ்ச்சிக்கு தாளாளர்
பீ.ஆசியா பரவீன்
தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக, தீயணைப்பு துறை நிலைய அலுவலர்
மு.பிரபாகரன் பங்கேற்று தீவிபத்து
விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு குறித்து கருத்துரை வழங்கினார். மேலும் தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு
செயல்முறை விளக்கம் அளித்தனர். மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்வுகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.