புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட உப்பனாரு வாய்க்கால் மேல் சாலை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தகடந்த வாரம் மாண்புமிகு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.10.06.2026.இன்று நடைபெற்று வரும் பணிகளை உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்நேயம் மக்கள் கழக தலைவருமான G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள்.மாண்புமிகு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அவர்கள் சொல்லியது போல் பணிகள் துரிதமாக நடைபெறுகிறதா என்று பொதுப்பணித்துறை அரசு செயலர் முத்தம்மா IAS அவர்களும் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்வீரசெல்வம் மற்றும் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வில் உப்பனாரு வாய்க்காலில் பணிகள் நடைபெறுவதற்காக கொட்டி உள்ள மண்ணை அகற்றுதல் மற்றும் உப்பனாரு வாய்க்கால் கீழ் உள்ள சேர்களை வாறுதல் மேலும் மழை காலங்களில் மழைநீர் எளிதாக செல்லும் வகையில் கரை ஓரங்களில் உள்ள செடி கொடிகளையும் குப்பை கூலங்களையும் அகற்றுதல் போன்ற பணிகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.நிகழ்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள்சீனிவாசன் ராஜ்குமார்சுந்தரி மற்றும் உதவி பொறியாளர்கள்,இளநிலை பொறியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.