June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, புகையிலைப் பயன்பாட்டினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு “பள்ளிகளுக்கான சவால்” என்ற தலைப்பில் ஒரு போட்டிக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதில் புதுச்சேரி கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய அளவில் ஆறுதல் பரிசு வென்றது. பரிசினை பள்ளியின் முதல்வர் டாக்டர். மோகன் பிரசாத் அவர்களும், போதைப்பொருள் ஒழிப்பு (என்.எம்.பி.ஏ) நோடல் அதிகாரி திருமதி. மஞ்சுளா அவர்களும் டெல்லிக்குச் சென்று பெற்று வந்தனர். இப்பரிசினைப் பெறுவதற்கு பள்ளியின் அனைத்து ஆசிரியப் பெருமக்களும் உறுதுணையாக இருந்தனர்.