June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

நீதி கதிர் எக்ஸ்பிரஸ் விரைவு செய்தி எதிரொலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாப்பர்த்தி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மோரன அள்ளி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே தனியார் பள்ளி விளம்பர பேனர்கள் வைத்ததை நீதி கதிர் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை விரைவு செய்தியாக வெளியிட்டதும் உடனடியாக சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி பேனர்கள் அகற்றப்பட்டது.
இது போன்ற சம்பவம் இனி வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க அரசு பள்ளி அருகே வைக்கப்பட்டுள்ள பேனர்கள் குறித்து புகார் செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர்
கவியரசு
9900557307

You may have missed

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஜூன்-07:உலக சுற்றுச்சூழல் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மக்கள் ஜனாதிபதி APJ அப்துல் கலாமின் வல்லரசு இந்தியா இயக்கம் மற்றும் APJ அப்துல் கலாம் IAS அகாடமி சார்பில் செஞ்சி கோட்டை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு வருவாய் ஆய்வாளரும், சமூக சேவகருமான கண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செஞ்சி வருவாய் வட்டாட்சியர் கார்த்திகேயன் அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் அருள்தாஸ், புகழரசன், தமிழ்நாடு தன்னார்வலர் அமைப்பின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் ஹரிவாசன் மற்றும் செஞ்சி APJ அப்துல் கலாம் IAS அகாடமியின் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.