காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம். திண்டுக்கல் மே 14 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூர் கலர் பட்டி பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் வயது 30 இவர் தனியார் பால் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார் இந்நிலையில் வடமதுரை தென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த சோபியா வயது 21 என்ற பெண்ணை கடந்த ஒரு ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளார் பெண் கேட்டு தர மறுத்ததாக தெரியவந்தது இருவரும் காதலித்து வந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி அய்யலூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர் பின்னர் பெண் வீட்டார் பிரச்சினை செய்வார்கள் என கருதி வடமதுரை காவல் நிலையத்தில் காதலர்கள் மனக்கோளத்தில் தஞ்சம் அடைந்தனர் வடமதுரை போலீசார் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழ அறிவுரை கூறி யாரும் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என மணமகன் வீட்டாருடன் அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!