பெயர்= எஸ். கிருத்திகா சிவக்குமார்.
பிறந்த தேதி= 25/1/ 1986.
கணவர் பெயர்= டாக்டர் சி. சிவக்குமார் எம்பிபிஎஸ்,, எம் பி ஏ.
ஜாதி= இந்து கொங்கு வேளாளர்.
கல்வி தகுதி = பி ஏ. எம் பி ஏ.
வயது=40
மகன்கள்= ஆரியன், அர்ஜூன்.
மாமியார்= தற்போதைய மொடக்குறிச்சி தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக உள்ளார்.
பாரம்பரியமாக அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்.
தற்போது மொடக்குறிச்சி தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக இருக்கும் டாக்டர் சி. சரஸ்வதி அவர்களுக்கு தொகுதி முழுவதும் நல்ல அறிமுகவும் செல்வாக்கும் உள்ளது.
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தியவர் என பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்படுபவர் எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி அவர்கள்.
அப்போது மொடக்குறிச்சி தொகுதிக்கு பாஜக வேட்பாளராக அவரது மருமகள் கிருத்திகா சிவக்குமார் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளார்.
கல்வி நிறுவனங்கள் மற்றும் அறம் அறக்கட்டளை மூலம் மக்களுக்கு கிருத்திகா சிவகுமார் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய காரணங்களால் இவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தொகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.

More Stories
கோவிலில் சீட்டு போடும் பணிக்காக வேலை வாங்கி தருவதாக கூறி. 425000 மோசடி செய்த அறங்காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை. வடமதுரை மே14 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திண்டுக்கல் திருச்சி சாலையில் வாகன ஓட்டிகளுக்கு சிம்ம சொற்பனமாக அமைந்திருக்கும் வண்டி கருப்பண்ண சாமி கோவிலில் சீட்டு போடும் வேலை வாங்கி தருவதாக கூறி அறங்காவலர் ரங்கநாதன் என்பவர் அய்யலூர் மணியக்காரன்பட்டி பகுதியைச் சேர்ந்த உஷாராணி என்ற பெண்ணிடம் ரூபாய் 4,25,000 பணம் வாங்கிக் கொண்டு இன்றும் நாளையும் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக கோவில் அருகே நின்று அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோஷங்களில் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் இது குறித்து வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புகார் அடிப்படையில் போலீசார் கடந்த சில மாதங்களாக சம்பந்தப்பட்ட அறங்காவலர் வசம் வட்டிக்காசு போல் உங்களுக்கு வாங்கி கொடுத்து சமாதானம் கூறி அனுப்பி வைத்தனர் அறங்காவலர் இதுபோன்று வேறு யாரையும் ஏமாற்றி உள்ளாரா அல்லது இவர் மட்டுமே ஏமாற்றப்பட்டுள்ளார் என்பது குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தி உங்களுக்கு வரவேண்டிய தொகையை பெற்று தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். பணம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தருவதாக கூறி புகார் அளித்தும் வடமதுரை போலீசார் சம்பந்தப்பட்ட நபருக்கு ஆதரவளிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
election result
election result