கத்தி கூச்சலிட்ட கடைக்காரர்.
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தம்பட்டி பகுதியை சேர்ந்த சுமதி (40),தனது “ஶ்ரீ ஹரி ஜூவல்லர்ஸ்” வெள்ளி நகைக் கடையில் வியாபாரம் செய்து வருகிறார்.
வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 1 மணியளவில், தலைக்கவசம் அணிந்த ஒரு நபர் கடைக்குள் புகுந்து சுமதியின் மீது மிளகாய்ப் பொடியை தூவி, கொள்ளையடிக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மிளகாய்ப் பொடியின் தாக்கத்தை தாங்க முடியாமல் சுமதி பயங்கரமாக கூச்சலிட்டதால், பயந்த அந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்து தப்பிச் சென்றார். சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். பொதுமக்கள், கடைக்காரர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை தெரிவித்து வருகின்றனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!