வில்லியனூர் தட்டாஞ்சாவடி கிராமத்தில்ரூ. 56 லட்சம் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணிஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி வி. தட்டாஞ்சாவடி கிராமத்திற்கு உட்பட்ட காந்தி நகர் பகுதியில் உள்ள குறுக்குத் தெருக்களுக்கு ரூ. 35,93,299/– லட்சம் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணி மற்றும் ரங்கசாமி நகருக்கு ரூ. 19,74,637/– லட்சம் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ. 55,67,936/– லட்சம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் மேற்கொள்ளப்பட உள்ள பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.இந்த நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, தார்ச்சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.இதில், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகரன், உதவிப் பொறியாளர் சத்தியநாராயணா, ஒப்பந்ததாரர் சந்தோஷ்குமார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் சரவணன், ராமதாஸ், முத்து, அன்பு, ரவி, பன்னீர்செல்வம், கோதண்டம், ஏழுமலை, கண்ணன், கருணாகரன், தனபால், சேகர், செல்வம், வீரா, ஆதிலட்சுமி, அப்துல் லத்தீப், பிரபு, ரொசாரியோ, கண்ணபிரான், சிவா, சரவணன், திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், அவைத்தலைவர் ஜலால் ஹலீப், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு அமைப்பாளர் முகம்மது ஹாலிது, ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஆறுமுகம் என்கிற செல்வநாதன், தொமுச அங்காளன், மாநில துணை அமைப்பாளர்கள் காளி, காசிநாதன், கோபி, மாநில துணைத் தலைவர் கதிரவன், தொகுதி துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் சுப்ரமணி, கிளைக் கழக நிர்வாகிகள் ராஜீ, சபரிநாதன், எம்.எஸ். முரளி, ஜனார்த்தனன், சரவணன், ரபீக், கமால்பாஷா, மிலிட்டரி முருகன், பாண்டியன், கார்த்திகேயன், ராஜேந்திரன், பாலமுருகன், கோவிந்தராஜ், ரவி, மணி, கலைமணி, ராமஜெயம், சோமு, சேகர், சிலம்பு, சர்புதீன், ஜெயபால்ராஜ், அரிசுகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!