திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஞானவேல் முருகன் ரதயாத்திரை ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். அதேபோல் 36 ம் ஆண்டு ரதயாத்திரை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. பாறைப்பட்டி அருகில் இருந்து தமிழ்க்கடவுள் ஸ்ரீ ஞானவேல்முருகன் உருவச் சிலை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகளுக்குப் பின் ஞானரத ஊர்வலம் தொடங்கியது. ரதயாத்திரைக்கு முன்னர் தப்பாட்டம், கரகாட்டம், ஆட்டம், பாட்டம் என பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலம் களைகட்டியது. புத்தாநத்தம் தெற்குதெரு பகுதியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வுக்குப் பின்னர் மீண்டும் ஊர்வலம் துவங்கி புத்தாநத்தம் கடைவீதி, இடையபட்டி வழியாக வடக்கு இடையபட்டியில் உள்ள ஞானமலையை வந்தடைந்ததும் ஞானவேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த ரதயாத்திரையில் சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். விழாவில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரெத்தினம் தலைமையில் 600 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்
மணப்பாறை அருகே ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டிய ஞானவேல் முருகன் ரதயாத்திரை ஊர்வலம்.600 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!