கோவை :ஜன-10
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரம் பகுதியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் 350-வது கிளையின் புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த புதிய கிளையை சால்ஜர் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனர் கோயம்புத்தூர் துரைசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.சிரியா, ஐக்கிய நாடுகள் சபை ஜெனிவா சிறப்பு தூதுவர் அலுவலகம்,தலைமை நிர்வாக அதிகாரி ஆறுமுகம், அமெரிக்கா கசடற டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் மேனேஜிங் பார்ட்னர் சிவகுமார் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். பெரியநாயக்கன்பாளையம் யூ.ஐ.டி. நிறுவனர் மற்றும் தலைவர் சண்முகம் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார்.
விழாவிற்கு வருகை புரிந்தவர்களை ராம்ராஜ் காட்டன் நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வரர் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் அஸ்வின் ஆகியோர் வரவேற்பளித்தார்கள்.மேலும் திறப்பு விழாவை முன்னிட்டு துணிகளுக்கு சலுகை விலை அறிவிக்கப்பட்டிருந்தது.தொடர்ந்து நிறுவனத்தின் வளர்ச்சியை பற்றி சிறப்புரைகள் ஆற்றி சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்கள்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!