மாவட்ட சமூகநலத்துறை — காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது..
ஈரோடு. 08
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை மற்றும் ஈரோடு காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளையின் சார்பில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கெம்பநாயக்கன்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கான சமுதாய விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு, போதை ஒழிப்பு, தலைக்கவசம் அணிவதின் அவசியம் மற்றும் இளம் வயது திருமணம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் கெம்பநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஈரோடு காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சாந்தா தேவி மாணவ மாணவிகளுக்கு இடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் ஈரோடு காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளை சிறப்பாக செய்திருந்தது.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!