வந்தவாசி, ஜன 04:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளூர் கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் பங்கேற்று புதிய கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மேலும் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி சிறப்புரை ஆற்றினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பிடிஓ ஏ.பி.வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் ஆரியாத்தூர் பெருமாள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கோபு சுமதி, திமுக பொறுப்பாளர்கள் மதன் குமார், கிஷோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!