கோவை- டிச:18
சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள நங்கநல்லூரில், ஒரு ஏக்கர் அரசு நிலத்தில் ரூ.39.20 கோடி செலவில் அமையவிருக்கும் தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு, (டிசம்பர் 16, 2025) மாண்புமிகு தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின்அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நாளொன்றுக்கு சுமார் 400 ஹஜ் புனித பயணிகள் தங்கி, ஓய்வெடுத்து, பயணத்தைத் தொடங்கும் வசதியுடன் கூடிய இந்த ஹஜ் இல்லம், விமான நிலையத்துக்கு மிக அருகில் அமைவதால், ஹஜ் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.
ஹஜ் பயணிகளின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் இந்த மகத்தான திட்டத்திற்கு வழியமைத்த முதல்வர் அவர்களுக்கு, பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பில் மனமார்ந்த நன்றியையும், உள்ளம் கனிந்த பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.
ஹாஜி J. முகமது ரஃபி
தலைவர், பல் சமய நல்லுறவு இயக்கம் தமிழ்நாடு.
தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம்உறுப்பினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!