February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுவை முதல்வர் இல்லத்தில் சிறப்பிக்கப்பட்ட ‘நீதி கதிர் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளர்கள்! – நேரில் அழைத்து விருது வழங்கி கௌரவிப்பு

​புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தில் பிரபலமான காலை நாளிதழான ‘நீதி கதிர் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் செய்தியாளர்கள் கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு நாளிதழின் ஆசிரியரும், வெளியீட்டாளருமான திரு. காசவியுல்லா அவர்கள் தலைமை தாங்கினார்.
​முன்னிலை வகித்தோர்:
இந்நிகழ்வில் புதுச்சேரி மாநிலத் தலைமைச் செய்தியாளர் திரு. மணிகண்டன், திரைப்பட இயக்குனரும் மாநில ஒளிப்பதிவாளருமான திரு. அஃனி ஆதவன், செய்தி ஆசிரியர் திரு. எம்.சி. ஆசிக் முஸ்தபா, நிர்வாக ஆசிரியர் திரு. சதாசிவம் மற்றும் சேலம் மாவட்ட செய்தியாளர் மற்றும் விரைவு செய்தி ஆசிரியர் திரு. நரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகள் வழங்க, புதுச்சேரி மாநில முதலமைச்சர் மாண்புமிகு திரு. என். ரங்கசாமி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத அரசுப் பணிகள் காரணமாக முதலமைச்சரால் மண்டபத்திற்கு வருகை தர இயலாத சூழல் ஏற்பட்டது.
​இருப்பினும், செய்தியாளர்களை ஏமாற்ற விரும்பாத முதலமைச்சர், அவர்கள் அனைவரையும் தனது இல்லத்திற்கே நேரில் வருமாறு அன்போடு அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சரின் இல்லத்திற்குச் சென்ற செய்தியாளர்கள் குழுவை இன்முகத்தோடு வரவேற்ற முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள், செய்தியாளர்களுக்கு விருதுகளை வழங்கி, சால்வை அணிவித்து கௌரவித்தார்.
​முதல்வரின் இந்த எளிமையான அணுகுமுறையும், பத்திரிகையாளர்கள் மீது அவர் கொண்டிருக்கும் மரியாதையும் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Facebook
YouTube
Instagram
WhatsApp