February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சி நியமன உறுப்பினர் பதவியேற்பு

ஈரோடு டிச., 3

ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சியில் நியமன உறுப்பினர் பதவி ஏற்றுக்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் வெள்ளாட்டம் பரப்பு பேரூராட்சியில் நியமன உறுப்பினருக்கான தேர்வு நடைபெற்றது. இதில் பாலசுப்பிரமணியன் என்பவர் மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கான நியமன உறுப்பினர் பதவிப்பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி, வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன உறுப்பினர் பதவிக்கான, பதவி ஏற்கும் நிகழ்ச்சியில், வெள்ளாட்டம் பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் ராமச்சந்திரன், நியமன உறுப்பினர் பாலசுப்பிரமணியத்துக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வெள்ளாட்டம் பரப்பு பேரூராட்சி தலைவர் சத்யா சண்முகம், துணைத் தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் அலுவலக பணியாளர்கள் பொதுமக்கள் பங்கேற்று கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp