February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 2, 3, 4 ஆகிய தினங்களில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை மாநகராட்சி அமைந்துள்ள அண்ணாமலையார் திருக்கோயில் 2025 ஆம் ஆண்டு திருகார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரப் பகுதிக்கு அருகாமையில் இயங்கிவரும் அரசு சில்லறை மதுபானக் கடை எண்: 9481 (காமராஜர் சிலை அருகில்) கடை எண்: 9261 (மணலுார்பேட்டை சாலை) கடை எண்: 9490 (அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் ) மற்றும் சமுத்திரம் கிராம கடை எண். 9476 ஆகிய 4 டாஸ்மாக் கடைகளும்,

02.12.2025 நண்பகல் 12.00 மணி முதல் 04.12.2025 அன்று இரவு 10.00 வரை 3 நாட்கள் மற்றும் திருவண்ணாமலை நகரத்தின் உள்பகுதியில் இயங்கிவரும் மதுபானக்கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள், முன்னாள் இராணுவ வீரர்களுக்கான அங்காடி, உரிமம் பெற்ற மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கு 02.12.2025 அன்று காலை 10.00 மணி முதல் 04.12.2025 அன்று இரவு 10.00 வரை 3 நாட்களுக்கு மதுவிற்பனை நடைபெறாமல் மூடிவைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp