செஞ்சி நவ 23
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி புனிதமிக்கேல் ஆலய வளாகத்தில்
தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செஞ்சி செக்கோவர் நிறுவனம் எஸ் டி சி ஆர் மற்றும் வாஷ் திட்டத்தின் தன்னார்வளர்கள் முன்னெடுக்கும் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செஞ்சி வட்டார முதன்மை குழு அருட்தந்தை அந்தோணி ரோச் தலைமை தாங்கி துவக்கி வைத்தார் .
செக்கோவர் இயக்குனர் அம்பிகா சூசைராஜ் முன்னிலை வகித்தார்.
இதில் பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை செய்து ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனர் .
முகாமில் முடையூர் தையூர் கவரை, காரை அ ணையேறி தடாகம் நல்லான் பிள்ளை பெற்றாள் ஆலம் பூண்டி மேல் பாப்பம்பாடி செவலபுரை எம்ஜிஆர் நகர் ஜே ஜே நகர் வழுக்காம் பாறை கொத்தமங்கலம் கன்னிகாபுரம் ஊரணிதாங்கள் போன்ற சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெரியோர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இம் முகாமில் கிராம குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் மற்றும் செக்கோவர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செஞ்சி செக்கோவர் நிறுவனம் சார்பில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம்

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்