August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

டேன் தொண்டு நிறுவனம் சார்பில் நலிவுற்ற பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வெள்ளகுளம் பகுதியில் வசிக்கும் 50 க்கும் மேற்பட்ட நலிவுற்ற பழங்குடியின குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு
டேன் தொண்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஏபில் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் தாளாளர் ஜான் வில்லியம்ஸ் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்த நலத்திட்ட உதவியில் அரிசி ,துவரம் பருப்பு ,எண்ணெய், மிளகாய் தூள், மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை டேன் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் மற்றும் ஏபில் மழலையர் பள்ளி ஊழியர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

மேலும், இந்நிகழ்வில் மணிகண்டன்,
ஏ.வள்ளி, பிரித்தா, சூர்யா, ஷாலினி, சத்யா வள்ளி மற்றும்
வெள்ளக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.