July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோட்டில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு, ஜூலை 14 :

ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், நாராயணவலசு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடை (கடை எண்: 3584) மற்றும் அதனுடன் இணைந்துள்ள மதுபானக் கூடத்தை உடனடியாக அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, டாஸ்மாக் கடையால் அப்பகுதியில் தொடர்ந்து சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாகவும், பெண்கள் மற்றும் மாணவிகள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும், மதுபோதையில் உள்ளவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது, சாலை விபத்துகள் மற்றும் அடிக்கடி தகராறுகள் நடைபெறுவது போன்ற பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

அந்த மனுவில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21 மற்றும் 47-வது கட்டுரைகள், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளை மேற்கோள் காட்டி, பொதுமக்களின் உயிர் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.