வந்தவாசி, ஜன 03:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவி நந்தனா சென்னையில் உள்ள அரசு பொது நூலகத்தில் 8 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கான மாநில அளவிலான இசை போட்டியில் பங்கேற்று, அறிவியலும் தமிழும் என்ற தலைப்பில் பாடலை பாடி, சிறப்பிடம் பெற்றார். மேலும் அவருக்கு ரொக்க பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பதக்கம் பெற்று பள்ளிக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்த மாணவியை புதுவை தமிழ் சங்கத் தலைவரும், தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி நிறுவனருமான கலைமாமணி முனைவர் வி.முத்து மாணவியை பாராட்டி, சால்வை அணிவித்து பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், திமுக நிர்வாகிகள் கோபிநாதன், சிவராமன், தெள்ளார் கணினி ஆசிரியர் பா.சுரேஷ், இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குனர்கள் டிகேஜி ஆனந்த், டிடி. ராதா, அருள்முருகன், அதிமுக நிர்வாகி கன்னியப்பன், பாமக நிர்வாகி வெங்கடேசன், கல்லூரி முதல்வர் முனைவர் இரா.ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!