மணப்பாறை மார்ச் 20:



திருச்சி மாவட்டம் மணப்பாறையில், நடைபெற உள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு நடைமுறையில் உள்ள தேர்தல் நன்னடத்தை விதிகளை தொடர்ந்து மணப்பாறை சட்டப்பேரவை தொகுதியில் பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் இன்று காலை மணப்பாறை அருகே உள்ள கோவில்பட்டி சாலையில் புதுகாலனி என்ற பகுதியில் பறக்கும் படை அலுவலர் செல்வகுமார் தலைமையிலான குழுவினர் சோதனையின் போது, ரைஸ் மில் உரிமையாளரான மாரி என்பவரிடமிருந்து ரூ.55,700 -யை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மணப்பாறை தாலுக்கா அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.