கோவை :ஜன-10
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரம் பகுதியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் 350-வது கிளையின் புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த புதிய கிளையை சால்ஜர் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனர் கோயம்புத்தூர் துரைசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.சிரியா, ஐக்கிய நாடுகள் சபை ஜெனிவா சிறப்பு தூதுவர் அலுவலகம்,தலைமை நிர்வாக அதிகாரி ஆறுமுகம், அமெரிக்கா கசடற டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் மேனேஜிங் பார்ட்னர் சிவகுமார் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். பெரியநாயக்கன்பாளையம் யூ.ஐ.டி. நிறுவனர் மற்றும் தலைவர் சண்முகம் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார்.
விழாவிற்கு வருகை புரிந்தவர்களை ராம்ராஜ் காட்டன் நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வரர் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் அஸ்வின் ஆகியோர் வரவேற்பளித்தார்கள்.மேலும் திறப்பு விழாவை முன்னிட்டு துணிகளுக்கு சலுகை விலை அறிவிக்கப்பட்டிருந்தது.தொடர்ந்து நிறுவனத்தின் வளர்ச்சியை பற்றி சிறப்புரைகள் ஆற்றி சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்கள்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்