வந்தவாசி, மார்ச் 09:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளை சார்பில் உலக மகளிர் தின விழா ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கிளை தலைவர் சு. தனசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் மலர் சாதிக், ம.ரகுபாரதி, துணை தலைவர்கள் க.வாசு, பா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் அ.பூவிழி வரவேற்றார்.
எக்ஸ்னோரா மாவட்ட தலைவர் பா.இந்திரராஜன் ‘மகளீரை போற்றுவோம்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக, செய்யாறு சப் கலெக்டர் எல்.அம்பிகா ஜெயின், சப் கோர்ட் ஜட்ஜ் எஸ்.சரண்யா, ஓய்வுபெற்ற இணை இயக்குநர் சி.சாவித்திரி ஆகியோர் பங்கேற்று சாதனைப் பெண்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர். மேலும் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர் நாகூர் மீரான், எக்ஸ்னோரா கிளை நிர்வாகிகள் க.பூபாலன், இரா.பாஸ்கரன், எஸ்.கே.பூபதி, வி.மணி, அப்துல் ரஹ்மான், சத்யமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக வரவேற்பு நடனமும், எக்ஸ்னோரா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்வை ஆலோசகர் கு.சதானந்தன் தொகுத்து வழங்கினார். இறுதியில் சங்க செயலாளர் சி.வினோத் குமார் நன்றி கூறினார்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election