June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

*புதுச்சேரி மிஷின் வீதியில் கடைகள் மற்றும் குடியிருப்பு உள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளவர்களிடமிருந்து இடத்தை மீட்டுத் தர வேண்டும் என்று இடத்தின் உரிமையாளர் காவல்துறை தலைவரிடம் புகார் மனு அளித்தார்*புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மேரி ஸ்டெல்லா டெனிஸ் இவர் நேற்று டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில்..தனக்கு சொந்தமாக புதுச்சேரி மிஷன் வீதியில்..எண் 103/251 என்ற இடம் உள்ளது, இந்த இடத்தில் இரண்டு கடைகளும்,ஒரு குடியிருப்பு வீடும்இருக்கின்றது.அந்த இடத்தில் வசித்து வந்த ஆஞ்சலின் மற்றும் அவர்களின் மகன்கள் ஆக்கிரமிப்பு செய்து இடத்தை காலி செய்யாமல் உரிமை கொண்டாடி வருகிறார்கள், மேலும் அவர்கள் உரிமை கோரி,புதுவை மூன்றாவது மாவட்ட உரிமையாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குஅவர்களுக்கு எதிராகவே தள்ளுபடி செய்தது.மேலும் அந்த வீட்டின் முகவரியில் Indo French collaboration அடிப்படையில் தொழில் தொடங்க உள்ளதால், அவர்கள் இடையூறாக உள்ளார்கள்.மேலும் ஆக்கிரமிப்பாளர்கள் உரிமை கொண்டாடும் இடம்எங்களுடைய இடம் என்பதற்கான அனைத்து விதமான சான்றிதழ்களும் உள்ளன. அதனை தாங்கள் பரிசீலனை செய்து, யார் பக்கம் நியாயம் உள்ளது என்று விசாரிக்குமாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.