புதுச்சேரி:
கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி நடத்தும் மூன்றாவது “புதுச்சேரி பிரீமியர் லீக்” (PPL T20 – 2026) கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் இன்று (16-05-2026) காலை 10:30 மணியளவில் துத்திப்பட்டில் உள்ள CAP மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் பின்வரும் 6 அணிகள் தங்களது பிரதிநிதிகளுடன் கலந்து கொண்டு, வீரர்களைப் போட்டி போட்டு ஏலம் எடுத்தன:
வில்லியனூர் மோஹித் கிங்ஸ்
ஊசுடு அக்கோர்ட் வாரியர்ஸ்
காரைக்கால் நைட்ஸ்
மாஹே ஸ்ட்ரைக்கர்ஸ்
ரூபி வைட் டவுன் லெஜெண்ட்ஸ்
ஜெனிட் ஏனாம் ராயல்ஸ்
புதிய வீரர்கள்: இந்த ஏலத்தில் மொத்தம் 115 புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு விளையாடிய வீரர்களில், ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 10 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறைப்படி வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர்.
அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 20 வீரர்கள் வரை ஏலம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி நிறுவனர் தாமோதரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதில் புதுச்சேரி பிரீமியர் லீக் தலைவர் வித்யா மகேஷ், கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி கௌரவ செயலாளர் கார்த்திகேயன், கௌரவ துணைத் தலைவர் கணபதி, தலைமை செயல் அதிகாரி மயங் மேத்தா மற்றும் கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த மூன்றாவது புதுச்சேரி பிரீமியர் லீக் (PPL) போட்டிகள் வரும் ஜூலை மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்