புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி ஆகியோர் குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி மகளிர் காங்கிரசார் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. வி.வைத்தியலிங்கம் அவர்கள், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மண்ணடிப்பட்டு தொகுதியில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி, புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி திருமதி. ஏ.ஆர்.நிஷா அவர்கள் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒன்றிணைந்து விருப்பமனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியான திருமதி. ஏ.ஆர்.நிஷா அவர்களும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி, மாநில மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் விருப்பமனு தாக்கல் செய்தனர். குறிப்பாக, முதலியார்பேட்டை, உப்பளம், உருளையன்பேட்டை அல்லது வில்லியனூர் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் அவர் களம் இறங்க வேண்டும் என அந்த மனுவில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது ஏராளமான மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்